மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
ADDED :150 days ago
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் குழந்தைசுவாமி சித்தருக்கு அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு வைகாசி மாத அமாவாசையையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. 12:00 மகா பூர்ணாஹூதி நடந்து, கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். இதேப் போன்று, நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடந்தது.