உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினமும் விநாயகர், சுப்ரமணியர்,அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா, செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது. பிரமோற்சவ விழாவில் நேற்று இரவு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் தங்க ரிஷப வாகனத்தில் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை 5.30 மணிக்கு 5 தேர் திருவிழா நடைபெறுகிறது.வரும் 7ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகேபுர வீதியுலா நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி, கலெக்டர் சோம சேகர் அப்பா ராவ்., கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !