ரத்தினகிரி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்!
ADDED :166 days ago
ராணிப்பேட்டை; வாலாஜா அடுத்த ரத்தனகிரி முருகர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வைத்து வழிபட்டனர். வள்ளி தெய்வானையுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.