மாரியம்மன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :133 days ago
கோவை; வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவை காட்டூர் விநாயகர் - மாரியம்மன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்சசியில் 108 சங்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சந்தன காப்புஅலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.