மாசாணி அம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :321 days ago
திருவாடானை; திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து பால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.