வெள்ளி கவசத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் அருள்பாலிப்பு; எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிக்கிழமை முன்னிட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனீஸ்வர பகவான் கோவிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று சனிக்கிழமை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை முதல் வரும் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி, நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்ட பின்னர் எள் தீபமேற்றி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.