சபரிமலை சென்று திரும்பும் போது என்ன யாத்திரை?
ADDED :4873 days ago
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு, திரும்பும் யாத்திரையை மடக்கு யாத்திரை என்பர். மடக்கு என்றால் ஒடுக்குதல் என்று பொருள். நம் அகங்காரத்தை ஒடுக்கிக் கொண்டு திரும்பவேண்டும். மீண்டும் ஆணவ எண்ணம் தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் இதை மடக்கு யாத்திரை என்றார்கள்.