கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED :82 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தீப ஒளியில் ஜொலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆடி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் தீப ஒளியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.