தொண்டி காமாட்சி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :49 days ago
தொண்டி; தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே காமாட்சி அம்மன் கோயில் 37 ம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பால்குடம் ஊர்வலம் நடந்தது. பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.