/
கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் செவ்வாய் சிறப்பு தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் செவ்வாய் சிறப்பு தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்
ADDED :12 hours ago
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய் கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி, கூட்டு வழிபாடும் செய்தனர்.