உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை

கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை

கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உலகளாவிய அன்பை மற்றும் சேவை குறித்து சாய்பாபாவின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழகம், கர்நாடகாவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி, கர்நாடகா குண்டல்பேட்டையில் ரத யாத்திரை ஊர்வலத்தை நிறைவு செய்து, நேற்று கூடலூர் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, புத்தூர் வயல், மண்வயல் பகுதிகளில் ரத யாத்திரை ஊர்வலம் நடந்தது. இரவு கூடலூர் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவிலில் தங்கினர். இன்று காலை, ஹெல்த் கேம்ப் சத்ய சாய் பாபா கோவிலிலிருந்து, சிறப்பு பூஜையுடன் ரத ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பஜனை பாடி வந்தனர். ஊர்வலம் ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய கோர்ட் சாலை, கோழிக்கோடு சாலை வழியாக சென்று ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. அங்கு, சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பழங்குடி பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஊர்வலத்தில், சாய்பாபா சேவை அமைப்பின் மாநில தலைவர் சுரேஷ், மாநிலத் துணைத் தலைவர், சரவணகுமார், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் கூடலூர் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !