உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் சுவாமி தரிசனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய அமைச்சருக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து விடுதியில் தங்கி இரவு ஓய்வெடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை, பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !