உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

காரமடை கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

கோவை; காரமடை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி இன்று கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் மகா கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.


காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு கற்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மேல் காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதை யொட்டி கற்பக விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !