உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் வழிபாடு

வெற்றி தரும் வழிபாடு

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற பொருட்களில் விநாயகராகப் பிடித்து வைத்தால் போதும். அவர் அந்த இடத்தில் எழுந்தருளி விடுவார். அவரை வழிபட்டால் சகல சவுபாக்கியமும், வெற்றியும் கிடைக்கும். 

* மஞ்சள் –  காரிய சித்தி, சகல சவுபாக்கியம் 

* குங்குமம் – செவ்வாய் தோஷம் தீரும், கல்வி சிறக்கும். 

* புற்றுமண் – நோய் தீரும், விவசாயம், வியாபாரம் பெருகும். 

* வெல்லம் – உடம்பிலுள்ள கட்டிகள் மறையும். 

* உப்பு –  எதிரி பயம் நீங்கும். 

* வெள்ளெருக்கு – செய்வினை தோஷம் விலகும், செல்வம் சேரும்.  

* விபூதி – உஷ்ண நோய்கள் நீங்கும். 

* சந்தனம் – குழந்தை பாக்கியம் 

* பசுஞ்சாணம் – தடையின்றி சுபநிகழ்ச்சி நடக்கும், நோய்கள் தீரும்.  

* வாழைப்பழம் –  குலம் தழைக்கும்  

* சர்க்கரை – கடன் தீரும். 

* கல் – வெற்றி சேரும். 

* மண் – உயர்பதவி கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !