உலக நன்மைக்காக வீர அழகர் கோயிலில் லட்சார்ச்னை விழா
ADDED :109 days ago
மானாமதுரை; உலக நன்மைக்காக மானாமதுரை வீர அழகர் கோயிலில் லட்சார்ச்னை நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் லட்சார்ச்னை பூஜைக்காக வீர அழகர், ஆஞ்சநேயருக்கு திரவிய அபிேஷகம், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் தலைமையில் லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.