பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி
ADDED :21 hours ago
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்ததில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.82 கோடி கிடைத்தது. இக்கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 935, வெளிநாட்டு கரன்சி 536 மற்றும் 619 கிராம் தங்கம், 9.322 கிலோ வெள்ளி கிடைத்தது. கல்லுாரி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.