இளையான்குடி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :14 minutes ago
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன், மாலை 6:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது.
நவ.3ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.அன்று மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள், இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.