பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த ராஜஸ்தான் சமண துறவிகள்
ADDED :2 hours ago
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,
முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை வேண்டி கடந்த இரண்டு வருடங்களாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கீழவளவு பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த துறவிகளை சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர். பிறகு துறவிகள் மக்கள் மத்தியில் மது, மாமிசம் பயன்படுத்தக்கூடாது. அமைதி, அஹிம்சை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனர். பிறகு பஞ்ச பாண்டவர் மலையில் தங்கியவர்கள் இன்று (நவ.10) திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.