உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோவிலில் ஆருத்ரா சிறப்பு பூஜை

மலைக்கோவிலில் ஆருத்ரா சிறப்பு பூஜை

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜை நடந்தது.காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, டிசம்பர் 28 காலை, 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பவுர்ணமி கிரிவல பூஜை நடந்தது.ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
* காவேரிப்பட்டணம் பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு திருவாதரை களி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பவுர்ணமி கிரிவல பூஜை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலையில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !