உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும்  பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.  இந்த சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி இன்று காலை 10 மணிக்கு சந்திரசேகர (துவஜா ரோஹணம்) கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், சந்திரசேகரன், ஆனந்தவல்லி,  சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடி மரத்துக்கு மஞ்சள், பால், தயிர், சந்தானம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  விழாவில் கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கோவில் நிர்வாகத்தினர், குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 21-ம் தேதி மாலை அமிர்தகடேஸ்வர சாமி பஞ்சமுக கொடியேற்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !