உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சத்யசாய்பாபா நுாற்றாண்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் சத்யசாய்பாபா நுாற்றாண்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

 பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா நடந்தது. 

சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா நுாற்றாண்டு விழா, பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி சத்யசாய் சேவாசமிதியில் நடந்தது. முன்னதாக, கடந்த, 16ம் தேதி ஓம்காரம், சுப்ரபாதம், பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பாலவிகாஸ் குழந்தைகளின் திறன் போட்டிகள், சாய் பஜன், ேஹாமியோபதி மருத்துவ முகாம், மங்கள ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதேபோல, சூளேஸ்வரன்பட்டியில், சாய்பஜன், மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு வழிபாடும், ஆச்சிப்பட்டி சக்தி சாய்ராம் இல்லத்தில், சாய் பஜன், கதைப்பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குதல், சுயம்வர பார்வதி கலா ேஹாமம், சந்தான கோபால ேஹாமம், ஆயுள் விருத்தி ேஹாமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாலையில், மஹா நாராயண சேவை, பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஆனந்த வாழ்வு தரும் சாய்நாமம் சிறப்பு பக்தி இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அதில், ஆந்திரா சத்யசாய் பல்கலை முன்னாள் மாணவர் சாஹந்தி சீனிவாச சுப்பாராவ் இசை நிகழ்ச்சியை வழங்கினார். தவிர, மங்கள ஆரத்தி, ஊஞ்சல் உற்சவம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !