பஞ்சமுக மஞ்சள் வாராஹி கோவிலில் பஞ்சமி திதி வழிபாடு
ADDED :7 minutes ago
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், பஞ்சமி திதியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அதனையொட்டி, அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்கக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதணை நடந்தது. பெண்கள் கோவிலில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். மேலும் தேங்காய் தீப வழிபாடு, ஊஞ்சல் உற்சவ சேவையில் பக்தர்கள் பங்கெடுத்து சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.