உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னதடாகம் உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

சின்னதடாகம் உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

சின்னதடாகம்; சின்னதடாகம் அருகே உள்ள உச்சையனூர் மகாலட்சுமி அம்மன் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


சின்னதடாகம் அருகே உச்சையனூர், ஆர்.ஆர். நகர், தடாகம் புதூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சனிக்கிழமை காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன ஹோமம், தீபாராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கங்கணம் கட்டுதல், மதியம், 3:00 மணிக்கு தீர்த்த கலசங்கள் அழைத்து வருதல், மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 7:00 மணிக்கு அம்மனுக்கு நகை பெட்டி கொண்டு வருதல், 9:30 மணிக்கு தீபாராதனை, மூலாலய மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு நந்தா விளக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு தடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில் நாம சங்கீர்த்தன மற்றும் பிருந்தாவன் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !