உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் மண்டல பூஜை திருவிழா பாலக்கொம்பு எடுத்து வந்த பக்தர்கள்

கோவிலில் மண்டல பூஜை திருவிழா பாலக்கொம்பு எடுத்து வந்த பக்தர்கள்

வால்பாறை: வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.


வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், 66ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு ஸ்டேன்மோர் ரோடு ராஜிவ் நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்தும், பெண்கள் கையில் விளக்கு ஏந்தியும் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர். விழாவில் நேற்று மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !