ரிஷபம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சு
ஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2026ம் ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
சனி சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை லாப சனியாக சஞ்சரித்து ஆதாயம் அளிப்பவர் அதன்பின் ஏழரை சனியாக விரய செலவுகளையும் அலைச்சலையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பணியில் பிரச்னைகள் என்ற நிலையை வழங்குபவர் அதன்பின் லாப சனியாக வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கி எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆதாயத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், வியாபாரம், வேலை, குடும்பம் என அனைத்திலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். சேமிப்பிற்கும், சொத்து சேர்க்கைக்கும் வழியமைப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ.13 வரை பத்தாமிட ராகுவும், சுகஸ்தான கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். அலைச்சலை ஏற்படுத்துவர். உங்கள் திறமையை சோதிப்பர். தாயாரின் உடல் நிலையில் சங்கடம், தாய்வழி உறவுகளுடன் இடைவெளியை ஏற்படுத்துவர்.
குரு சஞ்சாரம்
மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தினருக்கு ஆண்டின் தொடக்கத்தில் பண வரவையும் குடும்பத்தில் நிம்மதியையும் உண்டாக்குவார். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். ஏழரை சனியின் பாதிப்புகளை நெருங்க விடாமல் செய்வார். அக். 20 முதல் அனைத்து நலன்களையும் உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை, மன நிலையையும் சீராக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச்17 முதல் குடும்பத்தில் நிம்மதி, பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். மே 26 முதல் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என்ற கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து, வேலையில் முன்னேற்றம், மனதில் நிம்மதியை உண்டாக்குவார்.
சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 15 – மார்ச்14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16, செப். 18 – அக்.17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப்.13 – ஏப்.13 காலத்திலும், ஜூலை17 – ஆக. 17, அக்.18 – நவ.16 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். நெருக்கடி, வம்பு, வழக்கு, பிரச்னையில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். கவுரவம், ஆரோக்யமாகவும் நடைபோட வைப்பார்.
பொதுப்பலன்
உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை, வசதி வாய்ப்பு என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.
தொழில்
தொழிலில் இருந்த தடை விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறும். வருமானம் உயரும். ஆதாயம் அதிகரிக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், மொபைல், சினிமா, சின்னத்திரை, யூ ட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். வியாபாரம் விரிவடையும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஊதியம் உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சனை, மெமோ, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். வேலையில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும்.
பெண்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திறமைக்கு மதிப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்கள் குறை ம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை
அலைச்சல், வேலைபளுவின் காரணமாக சிறு சங்கடங்களும், பரம்பரை நோய், பருவ நோய் என்று ஏற்பட்டாலும் மருத்துவத்தால் அவை குணமாகும். உடல்நிலை முன்னேற்றமடையும்.
குடும்பம்
குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்று உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும்.
பரிகாரம்: சட்ட நாதரை வழிபட நெருக்கடிகள் நீங்கி நன்மை உண்டாகும்.
ரோகிணி: அதிர்ஷ்ட காலம்
மனக்காரகன் சந்திரன் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். கவுரவமாக நடைபோடும் நிலை உண்டாகும்.
சனி சஞ்சாரம்
மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பிரச்னையை ஏற்படுத்தினாலும், அதன்பின் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர் கடந்த இரண்டரை ஆண்டாக ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்கி முன்னேற்றத்தை தருவார். வேலையில் மெமோ, தண்டனை என சங்கடப்பட்டு வந்த நிலையில் நல்ல மாற்றத்தை உண்டாக்குவார். தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை வழங்குவார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் பெருமைக்கும் புகழுக்கும் வழியமைப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.13 வரை கேந்திர பலத்துடன் சஞ்சரிக்கும் பத்தாமிட ராகுவும், நான்காமிட கேதுவும் வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பர். உழைப்பால் உயர்வு காண வேண்டிய நிலையை உருவாக்குவர். முயற்சிக்கேற்ற ஆதாயத்தை வழங்குவர். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவாலும் பாக்ய ராகுவாலும் உங்கள் வாழ்வு வளமாகும். விருப்பம் பூர்த்தியாகும். அந்தஸ்து உயரும். மனம் நிம்மதியடையும்.
குரு சஞ்சாரம்
மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கும் நிலையால், மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொன், பொருள் சேரும். மே 26 முதல் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். வீடு, வாகனம், வேலை என கனவுகள் நனவாகும். அக். 20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செல்வமும், செல்வாக்கும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
சூரிய சஞ்சாரம்
பிப்.13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக.17, அக்.18 – நவ.16 காலங்களிலும் நீங்கள் எடுக்கும் முயற்சி சாதகமாகும். துணிச்சல், தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் லாபமடையும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசுவழி வேலைகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
பொதுப்பலன்
தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். வேலை, தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலத்திற்குரிய வழி தெரிய வரும். சேமிப்பு, செல்வாக்கு உயரும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.
தொழில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை, வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, தொழிலில் முன்னேற்றமில்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை, ஆபரண விற்பனை லாபம் தரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலையில் நெருக்கடி நீங்கும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து கொண்டு மரியாதை வழங்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் வேலையில் உயர்வு உண்டாகும். சிலர் சம்பள உயர்விற்காக வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் நிலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
உங்கள் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் நிலைக்கேற்ப மகிழ்ச்சி உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவரை விட்டு விலகியவர்கள் மீண்டும் சேரும் நிலையுண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உடல்நிலை சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதால் தேர்வில் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஆரோக்யத்தில் குறைபாடு, சின்னச்சின்ன தொந்தரவு, மருத்துவச்செலவு என அவதிப்பட்ட நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். ஒவ்வாமை, அலர்ஜி, அல்சர் போன்ற சங்கடங்கள் விலகும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கடன் தொல்லை மறையும். புதிய சொத்து சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.
பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம்: முயற்சி வெற்றியாகும்
தைரிய, வீரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2026ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
சனி சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், வேலையில் பிரச்னை ஏற்படுத்தினாலும் அதன்பின், லாப சனியாக சஞ்சரிப்பவர் உயர்வை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் லாபம் காண வைப்பார். நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை கொடுப்பார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணத்துடன் புகழுக்கும் வழிகாட்டுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை முன்னேற்றத்தை வழங்கி வரும் சனி அதன்பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை, தொழிலில் சோதனை உண்டாக்குவார்.பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதும், வியாபாரிகள் கவனமாக இருப்பதும் சட்டத்திற்கு புறம்பான நிலையை தவிர்ப்பதும் அவசியம்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை வியாபாரம், தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதும் அக்கறை கொள்வதும் அவசியம். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவும் பாக்ய ராகுவும் தன்னம்பிக்கையை அதிகரிப்பர். வாழ்க்கையை வளமாக்குவர். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். அதன் பின், 2ம் இட கேது, 8ம் இட ராகு, குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி, உடல் பாதிப்பு என எதிர்மறை பலன் கிடைக்கும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவாக குடும்பத்தில் நிம்மதி, பண வரவில் தடையற்ற நிலை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, பொன், பொருள் சேர்க்கையை தருவார். மே 26 முதல் திருமண வயதினருக்கு திருமணம், தம்பதி ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் லாபம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு, வேலைவாய்ப்பு, செல்வாக்கை அதிகரிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரித்தாலும், சொத்து, சுகம், வருமானம், வசதி என்ற நிலைக்கு உயர்த்துவார். மே26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் திருமண வயதினருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம், வருமானம் என்று நன்மைகளை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார்.
சூரிய சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக. 17, அக். 18 – நவ. 16 காலங்களிலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச்15 – மே 14 காலத்திலும், ஆக. 18 – செப். 17, நவ. 17 – டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபத்தையும் உண்டாக்குவார்.
பொதுப்பலன்
இதுவரை இருந்த நெருக்கடி மறையும். முயற்சியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வசதி அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதி நிறுவனம், பங்குச்சந்தை கை கொடுக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.
பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி நிம்மதி உண்டாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கல்வி
தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் உயரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உடல்நலனில் ஏற்பட்ட தொந்தரவு விலகும். மனதில் இருந்த பயம் போகும். மருத்துவச் செலவு குறையும்.
குடும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள், சொத்து சேரும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் ஏற்படும். செல்வாக்கு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.