உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் ஐயப்பன் கோவில் தேர் பவனி

குன்னூர் ஐயப்பன் கோவில் தேர் பவனி

குன்னூர்; குன்னூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழாவில், கலாரூபம் ஆட்டத்துடன், செண்டை மேளம் முழங்க ஐயப்பன் பவனி வந்தார்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் ஐயப்பன் கோவிலில், 59வது ஆண்டு மண்டல பூஜை 26ல் துவங்கியது. விழாவில், திருவிளக்கு பூஜை, அன்னதானம், படி பூஜை, ராக்கால பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம் நடந்தது.காலை 11:00 மணியளவில் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குட ஊர்வலம் செண்டை மேளம் முழங்க ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.. ஐயப்பனுக்கு பாலபிஷேகம், கலபாபிஷேகம் மற்றும் தேன், பன்னீர், பஷ்மம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து, புஷ்ப அலங்காரத்தில் செண்டை மேளம் முழங்க, திருவீதி உலா புறப்பட்டது. இதில் பாலக்கொம்புடன், புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வந்தார். ஸ்ரீ கிருஷ்ணா பிரதீனா குழுவினரின் கலாரூபம் ஆட்டம் இடம் பெற்றது. தாளப் பொலி விளக்குகள் ஏந்தி சிறுமியர், மகளிர் ஊர்வலமாக வந்தனர். கோவிலில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, வி.பி தெரு, மவுன்ட்ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு புஷ்ப அலங்காரம் இடம் பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன., 14ல், மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை குன்னூர் ஐயப்ப பக்த சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !