சபரி சாஸ்தா பீடத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
ADDED :77 days ago
தேவகோட்டை; தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை பீடத்தில் உள்ள ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். 45ம் நாளான நேற்று ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோருக்கு பந்தல் அமைக்கப்பட்டு பந்தளராஜாவாக அலங்காரம் செய்யப்பட்டு பொன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்கள, பொதுமக்கள் சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர். சுமார் 6 ஆயிரம் பேருக்கு சம பந்தி விருந்து நடந்தது.