ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா: யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
ADDED :17 hours ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் உற்சவம் விருப்பன் திருநாள் ஆறாம் திருநாளில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா மே 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மே 16ம் தேதி வரை நடைபெறும் விழாவில் நம்பெருமாள் தினசரி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் ஆறாம் நாளில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 14ம் தேதி காலை நடைபெறுகிறது.