பீஹார் ராமாயண கோவிலில் நிறுவப்பட்டது 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்
மோதிஹாரி : பீஹாரில் கட்டப்பட்டு வரும் ராமாயண கோவிலுக்காக , தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய முப்பத்து மூன்று அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் , அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் நிறுவப்பட்டது
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா . ஜ , - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது . இங்குள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில் , மஹாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது. வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவில் , உலகின் மிகப்பெரிய ராமாயண கோவிலாக உருவெடுத்து வருகிறது தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் அங்கோர்வாட் மற்றும் தமிழகத்தின் ராமேஸ்வரம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களின் வடிவமைப்பில் , ஐநூறு கோடி ரூபாய் செலவில் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது . இது , உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலை விட மூன்று மடங்கு பெரிதாகும் . இந்தக் கோவிலில் , முப்பத்து மூன்று அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் நேற்று முன்தினம் நிறுவப்பட்டது
வே த மந்திரங்கள் ஒலிக்க , ராட்சத கிரேன்கள் உதவியுடன் பிரமாண்ட சிவலிங்கம் நிறுவப்பட்டது . அப்போது , ஏராளமான பக்தர்கள் , ஓம் நமசிவாய என்ற முழக்கங்களை எழுப்பி வணங்கினர் . மகா பலிபுரத்தில் உருவாக்கப்பட்ட இருநூற்று பத்து டன் எடை உள்ள இந்த சிவலிங்கம் , இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொண்ணூற்றாறு சக்கரங்கள் உடைய ராட்சத டிரைலர் வாயி லாக பீஹாரின் மோதிஹாரி கொண்டு வரப்பட்டது. விழாவில் , முதல்வர் நிதிஷ் குமார் , துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி , விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இது குறித்து , பீஹார் மாநில மத அறக்கட்டளை கவுன்சிலின் உறுப்பினர் சயன் குனால் கூறியதாவது
நிறுவப்பட்ட சிவலிங்கம் , ஒரே பாறையில் செதுக்கப்பட்டது . இதனால் , இது உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது . இந்த சிவலிங்கத்தில் , ஆயிரத்து எட்டு சிறிய சிவலிங்கங்கள் அடங்கியுள்ளன இதை வணங்குவதன் வாயிலாக , ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வணங்கிய ஆன்மிக பலனை பக்தர்கள் பெறுவர் . தமிழகத்தில் தயாரான இந்த சிலை , ஆந்திரா , மஹாராஷ்டிரா , மத்திய பிரதேசம் , உத்தர பிரதேசம் வழியாக மோதிஹாரியை அடைய நாற்பத்து ஐந்து நாள்களானது . விராட் ராமாயண கோவிலுக்கு , இரண்டாயிரத்து இருபத்து மூன்றில் அடிக்கல் நாட்டப்பட்டது . பிரதான கோவிலின் உயரம் இருநூற்று எழுபது அடியாக இருக்கும் . கோவில் வளாகத்தில் பதினெட்டு கோ புரங்களும் , பல்வேறு தெய்வங்களுக்கான இருபத்து இரண்டு சிறிய கோவில்களும் இருக்கும் ராமாயண கோவிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் , இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது . முழு கோவிலின் கட்டுமானப் பணிகள் இரண்டாயிரத்து முப்பதில் முடிவடையும் . இவ்வாறு அவர் கூறினார்.