சங்கராபுரம் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
ADDED :2 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதேபோல் சன்னதி தெரு திரவுபதி அம்மன், தேவபாண்டலம் ஏரிக்கரை துர்கையமமன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.