நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :5 hours ago
நெல்லிக்குப்பம்: செல்லியம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமானோர் கலந்த கொண்டனர். நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வாராஹி, கவுமாரி, சாமுண்டி என சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி, சன்னமதி ஹோமங்கள் நடந்தன. மேலும்,108 பெண்கள் பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். உலக அமைதிக்காக அரசு வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடத்தினர். இரவு வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி குளத்தை வலம் வந்து அருள்பாலித்தார். கரும்புகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.