உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, 29ம் தேதி துவங்கியது. காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ விநாயகர் வழிபாட்டு மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை காலை முதல் யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் நடந்து. தொடர்ந்து, 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கும்பாபிஷேத்துக்கான கலச நீர், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, 10:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !