அம்மன் சிலையின் கண்ணில் ரத்தம் வழிந்ததாக பரபரப்பு!
ADDED :4680 days ago
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளேரிதாங்கல் கிராமம், மேட்டுத் தெருவில் பெரியபாளையத்து அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் சிலையின் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்ததாக வெளியான தகவலையடுத்து, அதைப் பார்க்க ஏராளமானோர் கோவில் முன்பு கூடினர். அம்மன் சிலையில் ரத்தம் வழிந்ததாக கூறப்படும் ஒரு கண் சிவந்து காணப்பட்டது.