உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம்

சிதம்பரம்: சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம் நடந்தது.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் – ரத்தினசாலை அம்மையார் சிதம்பரம் இள மையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி இளமை பெற்றதாக வரலாறு. அதனையொட்டி, ஆண்டுதோறும் தை மாதம் இக்கோவிலில் வரலாற்று உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 9.00 மணிக்கு சிவபெருமான் சிவயோகியார் வடிவில் திருநீலகண்டருக்கு திருவோடு அளித்தல், இரவு 10:00 மணிக்கு சிவபுராணம் வாசித்தல் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுவாமி வீதியுலா, மதியம் 2.30 மணியளவில் புராணம் வாசித்தல், மாலை 3.00 மணிக்கு வரலாற்று உற்ச வமான, இளமையாக்கினார் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து, தீர்த்தவாரியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கரைக்குடி பழனியப்பன் குடும்பத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !