கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துளசி அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர்
ADDED :3 days ago
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், மகாலட்சுமி தாயார், லட்சுமி ஹயக்ரீவர்,ஸ்ரீ பூவராக சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு சுதர்சன ஹோமம், திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இதில் துளசி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.