கோவை பிரசன்ன மகாகணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை
ADDED :1 days ago
கோவை; மாசி மாத பிறப்பை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் மூலவர் விநாயகர் பெருமான் மற்றும் உற்சவமூர்த்திக்கு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் விநாயக பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.