அய்யலுார் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :13 hours ago
வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டியில் ஸ்ரீஅக்னி சின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி திண்டுக்கல் பிரசன்னா வெங்கடேஷ் ஐயர் தலைமையிலான குழுவினர் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், பேரூராட்சி தலைவர் கருப்பன், முன்னாள் தலைவர் ராஜமோகன், தீத்தாகிழவனுார் கோவில்தோட்டம் பேசும் பழனியாண்டவர் கோயில் நிர்வாகி செந்தில்நாதன் பங்கேற்றனர்.