திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை, 9:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்து. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முருகன் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் கிருத்திகை விழாவை ஒட்டி காலை, 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.