காஞ்சி ஓணகாந்தேஸ்வரர் கோவிலில் உழவார குழுவினர் துாய்மை பணி
ADDED :58 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.
ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் துாய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 380வது துாய்மை பணியாக, மார்ச் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக சிறப்பு துாய்மை பணி மேற்கொண்டனர்.
இதில், பிரகாரத்தை சுற்றிலும், நவக்கிரஹ உள்ளிட்ட பல்வேறு சிலைகளையும் சுத்தம் செய்தனர். கோவில் வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரங்களையும், அருகில் குளத்தில் வளர்ந்திருந்த செடிகளையும் வெட்டி அகற்றினர்.