உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர நிலைப்படி பிரதிஷ்டை

கொளஞ்சியப்பர் கோவிலில் ராஜகோபுர நிலைப்படி பிரதிஷ்டை

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள


இக்கோவிலில் சுவாமியிடம் வேண்டி பிராது கட்டினால் 3 நாட்கள், 3 வாரம் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டி, 15 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.


அதில், கோவிலின் மேற்கு, தெற்கு பகுதிகளில் புதிதாக ராஜகோபுரங்கள் கட்டப்படுகின்றன.


இதற்கு, நிலைப்படி பிரதிஷ்டை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள் வரவேற்றார்.


சிவாச்சாரியர்கள் நிலை வாயிலில் சிறப்பு பூஜைகள் செய்தததும், கிரேன் மூலம் ராட்சத நிலைப்படி பொறுத்தப்பட்டது. திருப்பணி கமிட்டி தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவர் நீதிராஜன், வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்குமார், பா.ம.க., கவுன்சிலர் சிங்காரவேல், மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பழமலை, விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், கனகசபை, முருகதாஸ், ராயர், டாக்டர் அன்புச்செழியன், கீதா ரவிக்குமார், வர்த்தகர்கள் நலச்சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !