உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு கொடிமரம் வைப்பதற்காக பணி நடந்து வருகிறது.


அதில், ‘தைலவாசம்’ எனும் கொடிமரம் எண்ணெயில் ஊற வைக்கும் வைபவம், கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடி மரத்தை எண்ணெயில் ஊற வைப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தொட்டியில், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, கடுக்காய் பொடி போடப்பட்டு பூஜை செய்யப் பட்ட எண்ணெய் ஊற்றப்பட்டது.


தொடர்ந்து, 48 நாட்கள் எண்ணையில் கொடிமரம் ஊற வைக்கப்படும். பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமஷே் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் தலைமையில், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ், நிர்வாகிகள் முத் தமிழ், வாசுதேவன், மகேந்திரன், குமார் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த சிறப்பு பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !