நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்ப உத்சவம்
ADDED :3 days ago
சிங்கபெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் குளமான சுத்த புஷ்கரணி குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உத்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும்.
இந்தாண்டு தெப்ப உத்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 8:10 மணிக்கு உற்சவர் பிரகலாதவரதர், முரளி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து மாட வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில் சிங்க பெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிங்க பெருமாள் கோவில் போலீசார் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.