ஆண்டாள், ரெங்க மன்னார் ஏப்.1ல் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள்,ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப். 1 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி மார்ச் 24 காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது.
ஏப்.1 காலை 7: 20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது. நிறைவு நாளான ஏப. 5 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்து வருகின்றனர்.