உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஸ்ரீசப்த மாதேயாரா கோவில்

ஏழு அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஸ்ரீசப்த மாதேயாரா கோவில்

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ஸ்ரீசப்த மாதா மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவில், உள்ளூர் மக்களால் ஏழு அம்மன்களின் கோவில் என, அழைக்கப்படுகிறது.


கோவில் கருவறையில், பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என, ஏழு அம்மன் சிலைகள் அருகருகே உள்ளன. ஒரே இடத்தில் ஏழு அம்மன்களின் தரிசனம் கிடைப்பதால், இக்கோவிலை மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்கள் பார்க்கின்றனர். கோவில், 300 ஆண்டுகள் பழமையானது என்றும் வரலாறு கூறுகிறது.


ஹிந்து மதம், தர்மத்தின் புகழை பரப்புவதற்காக, இக்கோவிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் நிதி உதவி அளித்தார் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் நவக்கிரகங்கள், விநாயகர், கால பைரவர் சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வதற்கு என, தனி இடம் அமைக்கப்பட்டு உள்ளது.


கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் கற்களால் செதுக்கப்பட்ட இரண்டு யானை சிலைகள் உள்ளன. இது, குழந்தைகளை வெகுவாக கவர்கிறது. கோவிலை சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்து அமரும் வகையில், கல் பெஞ்சுகள் அமைத்து உள்ளனர். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்றால் சாமி தரிசனம் முடிந்ததும், மலை உச்சியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை உள்ள வயல்வெளிகளை பார்த்து ரசிக்கலாம்.


கோவில் நடை தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையும், மதியம் 3:30 முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்து இருக்கும். மேலும் தொடர்புக்கு: 96204 57219, 70191 55945 என்ற மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !