வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறும் நிகழ்வு
ADDED :58 minutes ago
வடமதுரை; வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இக்கோயில் உற்ஸவ திருவிழா மார்ச் 8 ல் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு கரகம் ஜோடித்து மின் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக கோயில் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. நேற்று மாலை முத்தாலம்மன் கோயில் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து 3 கழு மரங்கள் நடப்பட்டன. இதில் பாரம்பரிய உரிமை பெற்ற இளைஞர்கள் ஏறியதும் கோயில் வாசலில் படுகளம் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறைவடைகிறது.