உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயணபெருமாள் அருள்பாலிப்பு

கோதண்டராமர் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயணபெருமாள் அருள்பாலிப்பு

பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் அலங்காரம் அலங்காரம் நட்நதது. இதையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !