உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாபரண தரிசனம்

திருவாபரண தரிசனம்

மகரஜோதி தரிசன நாளில் சுவாமி ஐயப்பன் திருவாபரணம் அணிந்து ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இந்த ஆபரணம் எங்கிருந்து வருகிறது? மகரஜோதிக்கு முன்பாக பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்து திருவாபரணப் பெட்டியை வெளியே கொண்டு வருவர்.  இதை சுமப்பதற்கு என சில குடும்பத்தினர் உள்ளனர்.

பகவானின் சாட்சியாக கருடன் பெட்டியுடன் பறந்து வரும். அதை தரிசித்த பிறகே தலையில் திருவாபரணப் பெட்டி ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். இவற்றோடு ஒரு பல்லக்கும், பந்தள ராஜாவும் உடன் வருவர். யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு பூக்கள் துாவி வரவேற்பர். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்து வரும் திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக மகரசங்கராந்தி அன்று சன்னதியை அடையும்.

திருவாபரணத்தைச் சுமந்தபடி 18 படிகளில் ஏறி ஐயப்பனுக்கு அணிவிப்பர். அன்று சுவாமி பூரணா, புஷ்கலாவுடன் அச்சன்கோயில் அரசராகக் காட்சி தருவார். அப்போது தீபாராதனை காட்டியதும், மகரஜோதி தரிசனம் நடைபெறும். அன்று மட்டுமின்றி அடுத்த இரண்டு நாளும் திருவாபரணக் கோலத்தில் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !