கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :1 days ago
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் விழா மார்ச் 26 ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ராமருக்கு மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது. ஐந்தாம் நாள் கோதண்டராமர் ஸ்வாமி சீதா பிராட்டிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கோதண்டராமர் ஸ்வாமி, சீதாதேவி, லட்சுமணர் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.