காளஹஸ்தி அஞ்சி அஞ்சி விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :17 hours ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று திங்கட்கிழமை *சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு*, கோயில் வளாகத்தில், உள்ள அஞ்சி அஞ்சி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக ஹோமம் வளர்த்து பூர்ணாவூதி நடைபெற்றதை தொடர்ந்து ஆரத்திகள் எடுக்க பட்டது. மேலும் தீப தூபம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோயில் மேற்பார்வையாளர் நாகபூஷணம், ஆய்வாளர் வெங்கடசுவாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.