உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை புகழ் பெற்ற பாஸ்கு திருவிழா துவக்கம்

இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை புகழ் பெற்ற பாஸ்கு திருவிழா துவக்கம்

மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் உலக புகழ்பெற்ற பாஸ்கு திருவிழா நாளை துவங்குகிறது.


மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உலகப்புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இங்கு வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பு, வரலாறு மற்றும் இயேசு உயிர்ப்பித்தல் போன்றவற்றை பிரம்மாண்ட மேடைகள் அமைத்தும் கண்ணைக்கவரும் ஆடை அலங்காரங்கள் செய்தும் மேடை கலைஞர்கள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான விழா நாளை காலை 7:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்குகிறது. மாலை ஆறு மணிக்கு மதுரை மாவட்ட ஆயர் 100 ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சர்ச் முன்பாக உள்ள கிறிஸ்து அரங்கில் பாரம்பரிய பாஸ்கு திருவிழா துவங்குகிறது.இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !